மீஞ்சூர் பேரூராட்சியில் மழை நீரை அகற்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்- கவுன்சிலர்கள் கோரிக்கை
- 15-வது வார்டு உறுப்பினர் பரிமளா அருண்குமார் பேசுகையில் தங்களது பகுதியில் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இல்லாததால் மின் மோட்டார் மூலம் குழாயில் வரும் குடிநீர் குறைவாக வருகிறது.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன் ராஜ் தலைமையில் துணைத் தலைவர் அலெக்சாண்டர், செயல் அலுவலர் வெற்றி யரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், "தங்களது பகுதிகளில் மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், வார்டுகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும்" என்பது உள்பட பல்வேறு திட்டங்களை குறித்து கோரிக்கையை முன் வைத்தனர்.
15-வது வார்டு உறுப்பினர் பரிமளா அருண்குமார் பேசுகையில் தங்களது பகுதியில் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இல்லாததால் மின் மோட்டார் மூலம் குழாயில் வரும் குடிநீர் குறைவாக வருகிறது. தெருக்களில் பொது குடிநீர் குழாய் இல்லாததால் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாதவர்கள் தூரமாக நடந்து சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிய பகுதியாக காணப்படுவதால் கால்வாய் அமைத்து மழைநீரை அகற்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு செயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் அபூபக்கர், துரைவேல்பாண்டியன், சுகன்யா, சுமதி தமிழ் உதயன், கவிதா சங்கர் உள்பட பலர் கலந்து உள்ளனர்.