உள்ளூர் செய்திகள்
திருட்டுத்தனமாக மதுவிற்ற பெண் கைது
- மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர், குறிஞ்சிப்பூ தெருவில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ஓட்டேரி சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர், குறிஞ்சிப்பூ தெருவில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக நேற்று முன்தினம் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மதுவிற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அன்னபூரணி என்கிற பில்லா (வயது 34), என்ற பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஓட்டேரி சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.