உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதியோர்-குழந்தைகள் இல்லம் அனுமதியின்றி செயல்பட்டால் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

Published On 2023-04-19 06:44 GMT   |   Update On 2023-04-19 11:25 GMT
  • திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • குழந்தைகளுக்கு சத்தான உணவு அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அப்போது இல்ல நிர்வாகிகளுக்கு, குழந்தைகளுக்கு சத்தான உணவு அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

மாவட்டத்தில் அனைத்து குழந்தைகள் இல்லங்களும் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் இல்லங்களில் ஏதேனும் பதிவு செய்யாமல் இயங்கி வருவது அறியப்பட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார். ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவண குமார், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News