உள்ளூர் செய்திகள்

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னி வீரர்கள் தேர்வு முறையில் மாற்றம்- முதலில் எழுத்து தேர்வு

Published On 2023-02-21 10:57 GMT   |   Update On 2023-02-21 10:57 GMT
  • அக்னிவீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்களை வரவழைத்து உடல் தகுதியை நிரூபிக்க ஓட வைப்பார்கள். அதன்பிறகே எழுத்து தேர்வு நடைபெறும்.
  • தற்போது தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் எழுத்து தேர்வும் அதில் தேறியவர்களுக்கு உடல் தகுதி தேர்வும் நடத்தப்படும்.

சென்னை:

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தின்கீழ் வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த 16-ந்தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது.

திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். திருச்சி மற்றும் வேலூரில் தேர்வு நடைபெறும்.

வழக்கமாக அக்னிவீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்களை வரவழைத்து உடல் தகுதியை நிரூபிக்க ஓட வைப்பார்கள். அதன்பிறகே எழுத்து தேர்வு நடைபெறும்.

ஆனால் தற்போது தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் எழுத்து தேர்வும் அதில் தேறியவர்களுக்கு உடல் தகுதி தேர்வும் நடத்தப்படும்.

அதன்படி அடுத்த மாதம் (மார்ச்) 17-ந்தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு மின் அஞ்சலில் அனுப்பப்படும்.

ராணுவ பெண் போலீஸ் தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கு தகுதி உள்ள இளம் பெண்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Tags:    

Similar News