உள்ளூர் செய்திகள்

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற சந்திரயான்-3 விஞ்ஞானிகள்

Published On 2023-08-28 13:59 IST   |   Update On 2023-08-28 13:59:00 IST
  • ஆதிபராசக்தி அம்மனை வணங்கி விட்டு ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றனர்.
  • ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரிக்குச் சென்று வகுப்பறைகளை பார்வையிட்டு பழைய நினைவுகளையும் சந்திரயான்-3 விண்கல திட்டங்களையும் கல்லூரி ஆசிரியர்களுடனும் மாணவர்களிடமும் பகிர்ந்து கொண்டனர்.

மேல்மருவத்தூர்:

சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி அன்று உலக வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி நிலவை தொட்டது.

இதனால் இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். உலகமே இந்தியாவை வியந்து பார்த்தது.

இந்த சந்திரயான்-3 திட்டத்தில் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் தாமோதரன், குணசேகரன், ரகுபதி, சத்தியமூர்த்தி, ஜெயக்குமார், குமார், சுப்பிரமணி, சுதாகர் உள்ளிட்டோர் இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.

சந்திரயான்-3 வெற்றி பெற்றதை அடுத்து இந்தத் திட்டத்தில் பெங்களூருவில் பணியாற்றி வரும் விஞ்ஞானிகள் குழு இயக்குனர் ரகுபதி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவில் பணியாற்றி வருகின்ற ரேடியோ கிராபி மற்றும் ஆய்வு மைய தலைவர் குணசேகரன் ஆகியோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு நேற்று வந்தனர்.

அங்கு ஆதிபராசக்தி அம்மனை வணங்கி விட்டு ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றனர். இதனைத் தொடர்ந்து தியான மண்டபம் சென்று தியானம் செய்தனர். மேலும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில் குமார் ஆகியோரை சந்தித்து கல்லூரியில் படித்த பழைய காலங்களை நினைவு கூர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரிக்குச் சென்று வகுப்பறைகளை பார்வையிட்டு பழைய நினைவுகளையும் சந்திரயான்-3 விண்கல திட்டங்களையும் கல்லூரி ஆசிரியர்களுடனும் மாணவர்களிடமும் பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News