ராஜபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்த மாலதி (வயது23) என்பவருக்கும், சிவகாசி சங்கர் நகரை சேர்ந்தவர் நித்யன் (34) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக 60 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம், ரூ.4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.
மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 பவுன் நகை மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நித்யன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் டாக்டரிடம் சிகிச்சை பெற்று உள்ளார். மேலும் தொடர்ந்து மாலதியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் நித்யன், மாமனார் அரவிந்தன், மாமியார் தேவி, நாத்தனார் நிதர்சனா ஆகியோர் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாலதி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக ராஜபாளையம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதன்பேரில் ராஜபாளையம் போலீசார் கணவர் நித்யன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.