உள்ளூர் செய்திகள்

தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் கைது

Published On 2022-06-11 13:52 IST   |   Update On 2022-06-11 13:52:00 IST
  • தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது.
  • வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை:

சென்னை திருமங்கலத்தில் தொழில் அதிபர் ஒருவரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட 6 போலீசார் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News