உள்ளூர் செய்திகள்

எருது விடும் விழாவில் சீறி பாய்ந்த காளைகள்

Published On 2024-03-15 09:02 GMT   |   Update On 2024-03-15 09:02 GMT
  • பேரண்டப்பள்ளி, சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.
  • 500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர்.

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி தாலுகா - சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட தோரிப்பள்ளி ஊராட்சிக்கு சேர்ந்த கல்லுக்குறுகி கிராமத்தில் அமைந்த முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு அப்பகுதி ஊர் கவுண்டர் குள்ளப்பா தலைமை தாங்கினார்.

விழாவிற்கு தோரிப்பள்ளி, கல்லுக்குறுக்கி அட்ட குறுக்கி, காமன்தொட்டி, வெங்கடேசப்புரம், அத்திமுகம், பேரிகை, பேரண்டப்பள்ளி, ஓசூர், சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.

500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர். அதில் சிலருக்கு காயங்கள் எற்பட்டது . அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பேரிகை, அத்திமுகம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர்.

இந்த விழாவில் பேரிகை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த எருது விடும் விழாவை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Tags:    

Similar News