உள்ளூர் செய்திகள்

செங்கல்சூளை ஊழியர் மர்ம மரணம்

Published On 2023-03-18 06:46 GMT   |   Update On 2023-03-18 12:03 GMT
  • வெள்ளவேடு போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • வெள்ளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்:

தென்காசி அடுத்த வாசுதேவநல்லூைர சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் வெள்ளவேடு அடுத்த கொத்தியம்பாக்கம் அருகே உள்ள கம்மவார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் தங்கி கணக்குப்பிள்ளையாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வெள்ளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News