உள்ளூர் செய்திகள்

அதிவேகமாக வந்த பைக் வடை கடைக்குள் புகுந்தது- கொதிக்கும் எண்ணெய் சிதறியதில் 2 பேர் காயம்

Published On 2022-12-27 11:10 GMT   |   Update On 2022-12-27 11:10 GMT
  • மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பழங்காநத்தத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்ணுசுதன் என்பது தெரியவந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 52). இவர் நேற்று இரவு மதுரை-திருப்பரங்குன்றம் சாலையில் நடந்து சென்றார்.

அழகப்பன் நகரில் சென்றபோது அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பாண்டியராஜன் படுகாயம் அடைந்தார். மேலும் அந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த வடை கடைக்குள் புகுந்தது.

அங்கு வடை சட்டியில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய் நாலாபுறமும் சிதறியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஷ்ணு சுதன், வடை கடை ஊழியர் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பழங்காநத்தத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்ணுசுதன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News