உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு
- காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு.
- கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் அரங்கத்தில் நிறைவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.