உள்ளூர் செய்திகள்

பணக்குடியில் ரெயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2022-07-14 04:54 GMT   |   Update On 2022-07-14 04:54 GMT
  • அசோக்கின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
  • இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது

நாகர்கோவில்:

பணகுடி ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், குமார் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் தண்டவாளத்தின் அருகே ஆட்டோ ஒன்றும் நின்று கொண்டிருந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் பணகுடி பாம்பன்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோக் (வயது 39) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அசோக்கின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இவர் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கும் முயன்றதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அசோக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News