உள்ளூர் செய்திகள்

ராஜபாளைளயத்தில் ஆட்டோ டிரைவர் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்

Published On 2022-10-11 12:11 IST   |   Update On 2022-10-11 12:11:00 IST
  • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி
  • ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாலுச்சாமியின் தந்தை முத்துராஜ் புகார் செய்தார்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது45). ஆட்டோ டிரைவர்.

இவர் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மனைவியிடம் மாடியில் உள்ள அறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாடி அறைக்கு சென்ற பாலுச்சாமி அறை கதவு திறக்காததால் காலால் உதைத்துள்ளார்.

இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாலுச்சாமியின் தந்தை முத்துராஜ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பலியான ஆட்டோ டிரைவர் பாலுச்சாமிக்கு பிரியா, பார்வதி என்ற மனைவிகள் மற்றும் 3 மகன்கள். 1 மகள் உள்ளனர்.

Similar News