காதல் திருமணம் செய்த 20 நாளில் சென்னை தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை
- கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமுருகனும் அனுப்பிரியாவும் ஆம்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர்.
- கணவர் தன்னுடன் தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த அனுபிரியா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அனுபிரியா (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
மேலும் வங்கி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி வகுப்புக்கு சென்றார்.
பயிற்சி வகுப்புக்கு சென்ற போது மின்னூர், ராமர் கோவில் தெருவை சேர்ந்த திருமுருகன் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமுருகனும் அனுப்பிரியாவும் ஆம்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர். மின்னூரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. திருமணமான சில நாட்களிலேயே கணவர் தன்னுடன் தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த அனுபிரியா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுபிரியாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அனுபிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.
அவர்கள் அனுப்பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீஸ் நிலையம் முன்பாக கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.