உள்ளூர் செய்திகள்

அகரம்சீகூர் அருகே கோவிலில் வெண்கல மணிகள் திருட்டு

Published On 2024-01-16 03:48 GMT   |   Update On 2024-01-16 03:48 GMT
  • கோவிலில் சாமி முன்பு கட்டி இருந்த சுமார் 35 பல்வேறு அளவிலான வெண்கல மணிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
  • கோவில் பூசாரி பிச்சப்பிள்ளை குன்னம் போலீசில் புகார் செய்தார்.

அகரம்சீகூர்:

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள அசூர் கிராமத்தில் அசூர் கிராமத்தில் இருந்து அந்தூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் சேரா குலத்தார் காட்டு கோவில் உள்ளது.

இந்த கோவிலில் அசூர் மற்றும் அந்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்த கோவிலில் பூசாரியாக பிச்சபிள்ளை என்பவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மாலை பூஜை செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் பின்னர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை பூஜை செய்வதற்காக சென்றார்.

அப்போது கோவிலில் சாமி முன்பு கட்டி இருந்த சுமார் 35 பல்வேறு அளவிலான வெண்கல மணிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கோவில் பூசாரி பிச்சப்பிள்ளை குன்னம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குன்னம் போலீசார் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து கோவில் மணிகளை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News