உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் மீண்டும் பற்றி எரிந்த காட்டுத்தீ

Published On 2024-04-18 03:41 GMT   |   Update On 2024-04-18 03:41 GMT
  • தீ மளமளவென பரவி சுமார் 2 ஏக்கர் பரப்பளவுக்கு பிடித்து எரிந்தது.
  • சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் லேடீஸ் சீட் பகுதியில் தீ ஏற்பட்டதால் உடனடியாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 3 மாதங்களாக மழை பொய்த்துபோய் காடு, மலைகள் பசுமை இழந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஏற்காடு மலை பாதையில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி அந்த தீயை அணைத்தனர்.

இந்த நிலையில் ஏற்காடு லேடீஸ் சீட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி சுமார் 2 ஏக்கர் பரப்பளவுக்கு பிடித்து எரிந்தது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் லேடீஸ் சீட் பகுதியில் தீ ஏற்பட்டதால் உடனடியாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முற்பட்டும் தீ கட்டுக்குள் வரவில்லை. குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகையும், சாம்பலுமாக காணப்பட்டது.

Tags:    

Similar News