உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக 16-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி

Published On 2024-02-11 14:55 IST   |   Update On 2024-02-11 14:55:00 IST
  • திண்டிவனம் நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
  • ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல் கூறி இருப்பதாவது:-

திண்டிவனம் நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதோடு, சாலைகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்படாததன் காரணமாக ஏற்படும் புழுதியால் பொது மக்கள் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

பொது மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.தி.மு.க. விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 16-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில், திண்டிவனம் ஆர்.எஸ். பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News