உள்ளூர் செய்திகள்

கொரட்டூரில் துணிக்கடைக்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு

Published On 2022-10-07 08:58 GMT   |   Update On 2022-10-07 08:58 GMT
  • ஷட்டருக்குள் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரைப்பாம்பு கீழே விழுந்து கடைக்குள் சென்றது.
  • அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அம்பத்தூர்:

கொரட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கொரட்டூர் சிக்னல் அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடுவதற்காக ஷட்டரை இழுத்தார். அப்போது ஷட்டருக்குள் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரைப்பாம்பு கீழே விழுந்து கடைக்குள் சென்றது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர்.அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Similar News