உள்ளூர் செய்திகள்

வடபழனியில் மதுபாட்டில் பதுக்கி விற்ற பார் ஊழியர்கள் 6 பேர் கைது

Published On 2022-12-20 15:04 IST   |   Update On 2022-12-20 15:04:00 IST
  • டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் அதிகாலை முதல் மதுபாட்டில் பதுக்கி விற்பனை நடப்பதாக வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.
  • ரூ.20ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போரூர்:

வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் அதிகாலை முதல் மதுபாட்டில் பதுக்கி விற்பனை நடப்பதாக வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக மது விற்பனையில் ஈடுபட்ட பார் ஊழியர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மதியரசன், செல்வம், பெரம்பலூரை சேர்ந்த ராஜா, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரகாஷ், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில், பிரகாஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News