உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் நகராட்சியில் விதிமுறை மீறி வைக்கப்பட்ட 374 பேனர்கள் அகற்றம்

Published On 2023-02-12 06:23 GMT   |   Update On 2023-02-12 06:23 GMT
  • திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் விதி முறை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
  • விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அரசியல் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதி இன்றி எராளமான டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தொடரந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அதனை அகற்ற நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார்.

நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்த ராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் விதி முறை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் என மொத்தம் 374 டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. விதிமுறை மீறி பேனர்கள், விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News