உள்ளூர் செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணிகண்டன்.
- 3 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணிகண்டன். இவர் இரவு மோட்டார் சைக்கிளில் சீதஞ்சேரி பஜார் வீதிக்கு சென்றார். அங்குள்ள ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். சிறது நேரம்கழித்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள்மாயமாகி இருந்தது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வா, கில்பர்ட் கிரேஸ் ராஜ் , தங்கதுரை என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 3 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.