உள்ளூர் செய்திகள்

ஒட்டப்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை, ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை

Published On 2023-10-17 07:15 GMT   |   Update On 2023-10-17 07:15 GMT
  • சம்பவத்தன்று சீனிவாசன் காலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.
  • வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார்.

தொப்பூர்:

தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

சம்பவத்தன்று சீனிவாசன் காலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.

பணிகளை முடித்து விட்டு மீண்டும் பிற்பகலில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து உள்ளார். அப்பொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 24 1/2 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News