உள்ளூர் செய்திகள்

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்தப்படம்.

திண்டிவனம் அருகே தலை நசுங்கிய நிலையில் சாலையில் கிடந்த இளம்பெண் உடல்- காதலனிடம் போலீசார் விசாரணை

Published On 2024-02-24 16:30 IST   |   Update On 2024-02-24 16:30:00 IST
  • பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அனைத்து கேமராக்களும் பூமியை பார்த்தபடி தலைகவிழ்ந்து இருந்தது.
  • நடந்த உண்மை சம்பவத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

திண்டிவனம்:

சென்னை, கொளத்தூரை சேர்ந்த மாணவர் ரமேஷ் (வயது 21). இவர் சென்னையில் வேலை செய்து வந்த தனது காதலி பவித்ராஸ்ரீ (20) என்பவருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே, மோட்டார் சைக்கிளை 2 பேர் வழிமறித்து மொபைல் போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை தேடி மாணவர் ரமேஷ் சென்றுள்ளார்.

அவர் திரும்பி வந்து பார்த்த போது பவித்ராஸ்ரீ சாலையில் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஓலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கல்லூரி மாணவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். வழிப்பறி என்று மாணவர் நாடகமாடுகிறாரா? மாணவருக்கும், அவரது காதலிக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதில் வாகனத்தின் முன்பு ஓடிச் சென்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை வாகனத்தின் முன்பு தள்ளி விட்டு மாணவர் கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அனைத்து கேமராக்களும் பூமியை பார்த்தபடி தலைகவிழ்ந்து இருந்தது.

இதனால் நடந்த உண்மை சம்பவத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags:    

Similar News