உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் காரில் கடத்திய கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

Published On 2023-01-08 07:17 GMT   |   Update On 2023-01-08 07:17 GMT
  • சிப்காட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
  • சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தென் மாவட்டங்களில் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது சிப்காட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்த மாரிகணேஷ் ஞானராஜ் (வயது 38), குமரநகரை சேர்ந்த இசக்கிராஜா (29) என்பது தெரியவந்தது.

இவர்கள் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்தார்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கார் மற்றும் அவர்களிடமிருந்த 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்களை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News