உள்ளூர் செய்திகள்
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- போலீசார் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ஆந்திராவுக்கு வேனில் கடத்தி வந்த 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகாரஜான் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவுக்கு வேனில் கடத்தி வந்த 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தனசேகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். வேனுடன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.