உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தலைவாசல் தெற்கு வட்டாரகளஞ்சிய பொதுக்குழு கூட்டம்

Published On 2023-01-25 09:57 GMT   |   Update On 2023-01-25 09:57 GMT
  • தலைவாசல் தெற்கு வட்டார களஞ்சியம் சார்பில் 21-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
  • மேலும் 233 களஞ்சியங்களில் இருந்து 485 பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள தலைவாசல் தெற்கு வட்டார களஞ்சியம் சார்பில் 21-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக வீரகனூர் கிளையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் பார்த்தசாரதி, வீரதனூரில் உள்ள வார்டு உறுப்பினர் சுமதி, வட்டாரத் தலைவிகள், பணியாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் 233 களஞ்சியங்களில் இருந்து 485 பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வட்டார பணியாளர் ஜமுனா வட்டாரத்தின் சிறப்புகளை பற்றி விளக்கி பேசினார். மேலும் வங்கி மேலாளர் பார்த்தசாரதி மகளிர் குழுவின் சிறப்பை பற்றியும், வங்கி கடனை திரும்ப செலுத்துதல் குறித்தும் பேசினார். முடிவில் வட்டாரத் தலைவி கல்யாணி நன்றி கூறினார். அனைவருக்கும் சிறுதானியம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News