உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டும் பணி ஆய்வு
- ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
- கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமரு கல் அடுத்த கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜ புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.