உள்ளூர் செய்திகள்

பிக்கப் வாகனம் மோதி மேஸ்திரி பலி

Published On 2023-04-22 10:13 GMT   |   Update On 2023-04-22 10:13 GMT
  • அந்த வழியாக எதிரே வந்த பிக்கப் வாகனம் மகாலிங்கத்தின் மீது மோதியது.
  • பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது46). இவர் பெங்களூரில் மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று காரிமங்கலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த பிக்கப் வாகனம் மகாலிங்கத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News