உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பெரியமாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

Published On 2023-02-19 09:47 GMT   |   Update On 2023-02-19 09:47 GMT
  • இந்நிகழ்ச்சியினை மாநில அமைப்பு செயலாளர் ராமன், திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
  • 108 திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜைகள் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் உள்ள பெரியமாரியம்மன் கோயில் நேற்று 108 திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜைகள் நடந்தது.

கிருஷ்ணகிரி விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், மாத்ருசக்தி, துர்வாகினி அமைப்புகள் சார்பில், சென்னை சாலை உள்ள பெரியமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியினை மாநில அமைப்பு செயலாளர் ராமன், திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாத்ருசக்தி மாவட்ட அமைப்பாளர் அமுதாகோபி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலு, துணைத் தலைவர் கந்தன், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர்

சோமசேகர், ஆசைகுமார், துர்காவாகினி மாவட்ட அமைப்பாளர் தமிழரசி, வி.எச்.பி. சத்தியநாராயணன், பூசாரி பாபு மற்றும் பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

Tags:    

Similar News