உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் மனநலத்தை அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பது நற்பயனை தரும் -கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2022-12-23 09:42 GMT   |   Update On 2022-12-23 09:42 GMT
  • மனநல சேவை 14416 விரிவாக்க மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது.
  • நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 விரிவாக்க மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது.

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர். இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மனநல நல்லாதரவு மன்றம் "மனம்" மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண்ணாக 14416 அறிவித்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் மனம் என்று அழைக்கப்படும் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கை சார்ந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்ட சமாளித்து வெற்றி பெறுகின்றனர். சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.

இந்த வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலத்தை அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் கூடுதலான நற்பயனை தரும்.

உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தயக்கமின்றி உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் "மனம்" என்ற செல்போன் எண்.6379793630 பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், நட்புடன் உங்களோடு மனநல சேவை எண்ணாக 14416 என்ற எண் மூலம் அனைவரும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News