உள்ளூர் செய்திகள்

பந்தல் விழுந்து மாணவி காயம்

Published On 2023-08-16 10:28 GMT   |   Update On 2023-08-16 10:28 GMT
  • பந்தல் விழுந்த விபத்தில் 3 வகுப்பு படிக்கும் ரக்க்ஷா என்ற குழந்தையின் தலைமீது இரும்பு பைப் விழுந்தது.
  • குழந்தையை மீட்டு கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு தையல் போடப்பட்டது.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள திண்டாலனூர் பொம்மிடி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது பந்தல் விழுந்த விபத்தில் 3 வகுப்பு படிக்கும் ரக்க்ஷா என்ற குழந்தையின் தலைமீது இரும்பு பைப் விழுந்தது.

இதில் மண்டையில் ரத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்திய நிலையில் குழந்தையை மீட்டு கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு தையல் போடப்பட்டது.

பின்பு தருமபுரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கபட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் . சுதந்திர தினவிழாவில் நடந்த இந்த சம்பவம் அதிர்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags:    

Similar News