உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ. 44.90 லட்சம் செலவில் மாநில திட்டப்பணிகள் தீவிரம்

Published On 2023-08-29 01:08 GMT   |   Update On 2023-08-29 01:08 GMT
  • பணிகளை பேரூராட்சி தலைவர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
  • நிர்வாகிகள் இளங்கோ, சரவணன் சுரேஷ் கவுன்சிலர்கள் விஜயகுமார், தனசேகர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

மாமல்லபுரம்:-

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 16வது வார்டு எம்.என் குப்பம் பகுதியில் பொது நிதி ரூ.12.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சிமெண்ட் சாலை, 15வது வார்டு பரமசிவம் நகர் பொதுநிதி ரூ.8 லட்சம் மதிப்பில் சாஸ்திரி தெரு மழைநீர் வடிகால்வாய், 4வது வார்டு அன்னை சத்யா நகர் பொது நிதி ரூ.12.75 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் நமக்கு நாமே திட்டத்தில் அன்னை சத்யா நகரில் ரூ.12.5 லட்சம் மதிப்பில் சிறுபாலமும், சாலையும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பணிகளை பேரூராட்சி தலைவர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்தார். நிர்வாகிகள் இளங்கோ, சரவணன் சுரேஷ் கவுன்சிலர்கள் விஜயகுமார், தனசேகர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News