உள்ளூர் செய்திகள்

மழை ஓய்ந்து வடியத்தொடங்கியது வெள்ளம்: சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கம்

Published On 2023-12-05 03:17 GMT   |   Update On 2023-12-05 03:17 GMT
  • மழை நின்றதால் தற்போது வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.
  • இதனால் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மிச்சாங் புயல் காரணமாக நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மாநர பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இன்று காலையும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மழை நின்றதால் தற்போது வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேரம் செல்லசெல்ல வழக்கமான எண்ணிக்கையில் படிப்படியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News