உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 சி.பி.எஸ்.இ. தேர்வில் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி-10-ம் வகுப்பில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக சாதனை

Published On 2023-05-22 08:37 GMT   |   Update On 2023-05-22 08:37 GMT
  • மாணவி சம்ரித்தா பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
  • மாணவி லிபினா அருள், யாபியா ஜோஸ் ஆகியோர் தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஆலங்குளம்:

நெல்லை மாவட்டம் இடைகாலில் உள்ள ஸ்டஅக் ஹை-டெக் பள்ளியில் பிளஸ் -2 வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுதேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று முதல் ஆண்டிலேயே 100 சதவீத தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது.இதில் மாணவி சம்ரித்தா பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மேலும் தொடர்ந்து 3 ஆண்டுகளாக 10-ம் வகுப்பிலும் 100 சதவீத தேர்ச்சி என்ற உச்சம் தொட்டுள்ளது. 10-ம் வகுப்பில் மாணவி லிபினா அருள் மற்றும் யாபியா ஜோஸ் ஆகியோர் தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும், தனுபிரபா, ஜெசிந்த் ஹெப்சிபா மற்றும் ஸ்வீட்லின் அனி ஆகியோர் தகவல் தொழில்நுட்பம் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி மற்றும் முதல்வர் பிரவின்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News