உள்ளூர் செய்திகள்
குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
- மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்.
- ஆசிரியர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி,
குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் ஆசிரியர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் தலைமையாசிரியர் ஜோஸ்பின் மேரி சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கு மாணவர்களின் சார்பில் பரிசுகளை வழங்கினார். பள்ளி மாணவர்கள் அளித்த சிறப்பான ஆசிரியர் தின நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.