உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் விளையாட்டு விழா

Published On 2023-04-18 08:20 GMT   |   Update On 2023-04-18 08:20 GMT
  • விழாவுக்கு கல்லூரியின் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார்.
  • சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் கலந்து கொண்டார்.

வள்ளியூர்:

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் 52-வது விளையாட்டு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் பேசினார். முதல்வர் ராஜன் வரவேற்றார். கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர் ஜே.ஜெய்சன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் இயக்குனர்கள், கல்லூரிக்குழு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காமராஜ், ரகுநாதன், லிங்க செல்வன், கோல்டன் செல்வராஜ், பண்ணை செல்வகுமார், நவ்வலடி பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை பேராசியர் மரிய கிரிஸ்டின் நிர்மலா நன்றி கூறினார்.

Tags:    

Similar News