உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

Published On 2022-11-30 07:37 GMT   |   Update On 2022-11-30 07:37 GMT
  • பலூன் உடைத்தல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
  • போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று29-ந்தேதி மதுக்கூர் வட்டார வளமை யத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், தண்ணீர் பாட்டில் நிரப்புதல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. 30- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் வெ.மனோகரன் போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.

போட்டி ஏற்பாடு களை வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர் வீரப்பராஜா, பிரகாஷ், சிறப்பாசிரியர்கள் புஷ்பா, இருதயராஜ், பழனிவேல் ஆகியோர் செய்தனர்.

Tags:    

Similar News