பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
- அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
- மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பா ளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன், அர சாயி அம்மன், மாசாணி அம்மனுக்கு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.அதேபோல் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டி யம்மன், நன்செய்இடை யாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி, பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பா ளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வட கரையாத்தூர் மாரியம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு
அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.