நெல்லை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்- 12-ந்தேதி நடைபெறுகிறது
- 2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
- மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது
நெல்லை:
2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடத்த சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தர விட்டுள்ளது. அதன்படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வால் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
மேற்கூறிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 200 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
மேலும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) கேட்டுக் கொண்டுள்ளார்.