உள்ளூர் செய்திகள்

பனை மர விதைகளை விதைத்த காட்சி

குலசேகரன்பட்டினம், தருவை குளத்தில் பனை மர விதைகள் விதைப்பு

Published On 2022-11-14 09:01 GMT   |   Update On 2022-11-14 09:01 GMT
  • உடன்குடி வணிகர்கள் சங்கத்தின் 5 ஆண்டு விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பனை மர விதைகளை விதைத்தனர்
  • சங்கத்தின் தலைவர் அம்புரோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

உடன்குடி:

உடன்குடி வணிகர்கள் சங்கத்தின் 5 ஆண்டு விழாவையொட்டி குலசேகரன்பட்டினம், தருவைகுளத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை மர விதைகளை விதைத்தனர்.சங்கத்தின் தலைவர் அம்புரோஸ், சங்கச செயலாளர் சதீஷ், இணைச்செயலாளர் ஜெயபால், சங்கதுணைத் தலைவரும் உடன்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலருமான பிரதீப் கண்ணன்,பொருளாளர் மனோ. கவுரவ ஆலோசகர் கணேசன், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க தலைவர் முகைதீன், கிறிஸ்தியாநகரம் கவாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News