உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் பகுதியில் பனை விதைகள் விதைப்பு

Published On 2023-09-09 09:19 GMT   |   Update On 2023-09-09 09:19 GMT
  • நெசவாளர் காலனி பூங்காவில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
  • இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் இலவன்குளம் சாலையில் உள்ள நெசவாளர் காலனி பூங்காவில் விதைப்போம் வளர்ப்போம் குழு சார்பில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இதில் பசியில்லா சங்கரன்கோவில் அறக் கட்டளை நிறுவனர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாட்டினை சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மற்றும் குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர். கோவில்பட்டி வட்டம் இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

Tags:    

Similar News