உள்ளூர் செய்திகள்
சொத்தை பிரித்து தர கேட்டு தந்தையை தாக்கிய மகன் கைது
- சொத்தை தனக்கு பிரித்து தரவேண்டும் என்று சாமிநாதனிடம் சந்திரன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தார்.
மத்தூர் ,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மிட்டபள்ளி காமராஜநகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 59). இவரது மகன் சந்திரன் (37).
பூர்வீக சொத்தை தனக்கு பிரித்து தரவேண்டும் என்று சாமிநாதனிடம் சந்திரன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இதேபோல் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் அடைந்த சந்திரன் இரும்பு கம்பியால் சாமிநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சாமிநாதன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் கொடுத்த புகாரின்பேரில் சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தார்.