உள்ளூர் செய்திகள்
கைது
- குடும்ப தகராறில் தந்தையை மகன் தாக்கினார்.
- அவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த துடுக்கனஹள்ளி, கோவில்கொட்டாயை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55). விவசாயி. இவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரத்தில் சின்னசாமியை அவரது மகன் ஆனந்தன் (31) இரும்பு கம்பியால் தனது தந்தை என்று கூட பார்க்காமல் தாக்கினார். இதில் படுகாயமடைந்த சின்னசாமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி., அணை போலீசார் ஆனந்தனை கைது செய்தனர். மேலும் அவரது தாய் கண்ணம்மா, தங்கை பவித்ரா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.