உள்ளூர் செய்திகள்
சோமையம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை
- காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்
- சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி.நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி ரோடு.
கோவை:
சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (10-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சோமையம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையத்தின் ஒரு பகுதி, ஜி.சி.டி. நகர், லூனா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி சாலை, சேரன் தொழிற்பேட்டை, கே.என்.ஜி.புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி.நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி ரோடு.
மேற்கண்ட தகவலை சீரநாயக்கன்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்து உள்ளார்.