உள்ளூர் செய்திகள்

திறன் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-01-14 08:21 GMT   |   Update On 2023-01-14 08:21 GMT
  • தாட்கோ மூலம் நடைபெறும் திறன் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • இந்த திட்டத்தில் தகுதி யுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெறலாம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்ப டையிலான பயிற்சியை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி. ஏவியேசன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்பு டைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் கல்வித் தகுதியில் பிளஸ்-2 தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதம் ஆகும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.2 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.

இந்த பயிற்சியை வெற்றி கரமாக முடிக்கும் பட்சத்தில் AEROSPACE SKILL SECTOR COUNCIL -யால் அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப் படும். இந்த பயிற்சியை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go First,Vistra, Air India போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும்.

இந்த திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News