விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.
- கேப்டன் பாண்டியன், கேப்டன்முத்த, பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
தமிழகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் கடந்த 25-ந் தேதி முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,தே.மு.தி.க. கட்சி நிறுவனருமான விஜய காந்தின் 71-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அதன்அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரபாகர் காலனியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள மாண வர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் உறவு கள் மற்றும் புதிய சகாப்தம் வாட்ஸ் அப் குழு இணைந்து காலை உணவு மற்றும் நோட்டு புத்தகம் உபகர ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நாட்டார் மங்கலம் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் துரை பாஸ்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனசேகரன், பைசூர் ரகுமான், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பழனிவேல், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் ஜாபர் அலி, நகர செயலாளர் மாதவன், சிங்கம்புணரி செயலாளர்களான சிவகுமார்.
பாண்டி, ராக்கெட் ராஜா, கேப்டன் குமார், நாச்சியார்புரம் குமார், மருதங்குடி கணேஷ்பாபு, கல்லல் ஒன்றிய பொறுப்பா ளர் நேதாஜி பிரபாகர், கிருஷ்ணன், பிள்ளை யார்பட்டி சரவணன், முத்துப்பாண்டி, பாலு, பழனிவேல், ரமணாராமு, முருகேசன், மாவட்ட ஒன்றிய நகர் கிளைக் கழக நிர்வாகிகள் உடனி ருந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய நிர்வாகிக ளான கேப்டன் பாண்டியன், கேப்டன்முத்த, பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.