உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு காமிராக்கள் அமைப்பு

Published On 2022-09-27 09:10 GMT   |   Update On 2022-09-27 09:23 GMT
  • தேவகோட்டையில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமைக்கப்பட்டுள்ளது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. நகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் உதவியுடன் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நகர் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், சொந்த செலவில் 3-வது வார்டு அண்ணாசாலை 5-ம் வீதியில் கண்காணிப்பு காமிராக்கள் நிறுவினார். இந்த நிகழ்ச்சியை காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

அவர் கூறுகையில், இதேபோல் நகரில் அனைத்து வார்டுகளிலும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பட்சத்தில் நகர்பகுதி முழுவதும் பாதுகாப்பாக அமையும். கண்காணிப்பு காமிராக்கள் ஒவ்வொரு வீடுகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதால் முழு பாதுகாப்பு கிடைக்கிறது. நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் தாமாக முன்வந்து கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்றார். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News