2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
- 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியங்கா (26) இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று பிரியங்காவின் மாமனார் சேதுபாண்டியன் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார். அப்போது சிவ மணிகண்டன் அதனை எடுத்து வைக்கும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவர் உடனடியாக காய்கறிகளை எடுத்து வைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவமணிகண்டன் மனைவியை கண்டித்துள்ளார்.
இதை தொடர்ந்து மனமுடைந்த நிலையில் பிரியங்கா வீட்டின் மாடிக்கு சென்று சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவ மணிகண்டன் இதுபற்றி எஸ்வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியங்காவின் உடல மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியங்காவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பிரியங்கா தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தொடர்பாக சிங்கம்புணரிபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.