உள்ளூர் செய்திகள்

சிவகங்கை மாணவர் தங்கம் வென்றார்

Published On 2023-01-01 08:22 GMT   |   Update On 2023-01-01 08:22 GMT
  • சிவகங்கை மாணவர் தங்கம் வென்றார்.
  • மாணவர் சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

சிவகங்கை

சிவகங்கை முதலியார் தெருவை சேர்ந்த பாஸ்கரன்-லதா தம்பதியரின் மகன் சாய்வாசன் (14). சென்னை தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். பாட்மின்டன் வீரரான இவர் ஒடிசா மாநிலம் புவனேசுவரில் நடந்த தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். 15 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சாய்வாசன், அசாம் வீரர் போர்னில் ஆகாசை 15-21, 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்.சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News