உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கியதில் இறந்த கேங்மேன் வினோத்குமார்.

அரசு வேலை வழங்கக்கோரி சாலை மறியல்

Published On 2022-06-18 08:13 GMT   |   Update On 2022-06-18 08:13 GMT
  • மின்சாரம் தாக்கி பலியான ஊழியருக்கு நிதி உதவி-அரசு வேலை வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டனர்.

சிவகங்கை

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியை சேர்ந்த வர் வினோத்குமார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கேங் மேனாக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்தார். வினோத்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 34 நாட்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளது.

நேற்று காலை வினோத்குமார் சிலை யான் ஊரணி கிராமத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்து வக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் வினோத்குமார் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடம் வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்த வினோத்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News